TNTET Model Question and Answers -01

கல்வி உளவியல் (1 - 30)

  1. தனிச்செறிவுடைய தனிப்பட்ட பழக்கம் மற்றும் செல்வாக்கு என்பது.

    • A1: மனத்திறன், செயல்திறம், விருப்ப வேலை

    • A2: செயற்கைத் தனிப்பாங்கு பற்றிய பண்புரு

    • A3: ஒருவரது மனப்பான்மை

    • A4: பொதுவான தொழில்துறையில் நிகழ்கின்ற இசைவிப்பு

    • விடை: A2: செயற்கைத் தனிப்பாங்கு பற்றிய பண்புரு

  2. உட்புற மற்றும் வெளிப்புற உடல் மாற்றங்கள் எற்படுவது ________ வளர்ச்சி என அழைக்கப்படுகிறது.

    • A1: அறிவு

    • A2: மனவெழுச்சி

    • A3: உடல்

    • A4: சமூக

    • விடை: A3: உடல்

  3. ஊக்குவித்தலின் முக்கிய உத்தி என்று அழைக்கப்படுவது:

    • A1: கவனம் மற்றும் விருப்பம்

    • A2: விருப்பம் மற்றும் வழிகாட்டல்

    • A3: கற்றல் மற்றும் கவனம்

    • A4: ஊக்கம் மற்றும் கவனம்

    • விடை: A1: கவனம் மற்றும் விருப்பம்

  4. ”கல்வி உளவியல் என்பது கற்பித்தல்-கற்றலுக்கான தொடர்பை வழங்கும் ஒரு வகை உளவியல்” எனக் கூறியவர்:

    • A1: குரோவ் மற்றும் குரோவ்

    • A2: ஸ்கின்னர்

    • A3: பீல்

    • A4: மார்கியூஸ்

    • விடை: A2: ஸ்கின்னர்

  5. ஒரு புலனறிவு வழு ஆனது எந்தவொரு உண்மையான தூண்டல் புலனுணர்வு அடிப்படையற்றது எனில் அது:

    • A1: திரிபுக்காட்சி

    • A2: புலன் உணர்வு

    • A3: இல் பொருள் காட்சி

    • A4: சாயலாதல்

    • விடை: A3: இல் பொருள் காட்சி

  6. இரு காரணி கோட்பாட்டை முன்மொழிந்தவர்:

    • A1: E.L. தார்ண்டைக்

    • A2: கில்ஃபோர்ட்

    • A3: ஸ்பியர்மன்

    • A4: தஸ்டன்

    • விடை: A3: ஸ்பியர்மன்

  7. "சாதிக்கும் சமுதாயம் (The achieving society)" என்ற நூலை எழுதியவர் யார்?

    • A1: டேவிட் ஆஸ்பல்

    • A2: ஆபிரஹாம் மாஸ்லோ

    • A3: டேவிட் மெக் கெல்லன்ட்

    • A4: பி.எஃப். ஸ்கின்னர்

    • விடை: A3: டேவிட் மெக் கெல்லன்ட்

  8. உற்று நோக்கல் கற்றலில் உள்ள நான்கு படிநிலைகளை கண்டறிந்தவர்:

    • A1: மில்லர்

    • A2: டலார்ட்

    • A3: உட்ஒர்த்

    • A4: பன்டூரா

    • விடை: A4: பன்டூரா

  9. பற்றாக் குறையான வேலைகள், வீட்டு வசதி அல்லது வளத்திற்காக குழுக்களுக்குள் ஏற்படும் ________ அடிக்கடி விரோதங்கள் எழுகின்றன.

    • A1: ஒத்துழைப்பால்

    • A2: போட்டியால்

    • A3: போராட்டத்தால்

    • A4: ஒப்பீட்டால்

    • விடை: A2: போட்டியால்

  10. ________ நிலை மேம்பாட்டில் தனிநபர் ஒரு வாக்கியத்தில் ஒரு சொல்லானது எவ்வகையாக செயல்படும் என்பதனை பகுத்தாயும் திறன்பெறுகிறார்.

    • A1: பின் குழந்தைப்பருவம்

    • A2: இளமைப்பருவம்

    • A3: குமரப்பருவம்

    • A4: முதிர்ந்த

    • விடை: A1: பின் குழந்தைப்பருவம்

  11. நடத்தை வல்லுநர்கள் தவிர்த்த காரணி:

    • A1: சூழ்நிலை

    • A2: மரபு

    • A3: நடத்தை

    • A4: ஆளுமை

    • விடை: A2: மரபு

  12. ஃப்ராய்டு என்பவரின் கூற்றுப்படி ஒரு குழந்தையின் ஒழுக்க மேம்பாடு இந்த வயதில் முடிவடைகிறது:

    • A1: 4

    • A2: 6

    • A3: 8

    • A4: 10

    • விடை: A2: 6

  13. பயம், கோபம் மற்றும் பொறாமை போன்ற மனவெழுச்சிகள் ________ வகையைச் சார்ந்தது.

    • A1: நேர்மறை மனவெழுச்சி

    • A2: எதிர்மறை மனவெழுச்சி

    • A3: நடுநிலை மனவெழுச்சி

    • A4: பொய்யான மனவெழுச்சி

    • விடை: A2: எதிர்மறை மனவெழுச்சி

  14. மோசமான பொழுதுபோக்கு ஊடகம் ________ நெறிபிறழ் நடத்தை குற்றத்திற்கு காரணம் ஆகும்.

    • A1: குடும்பம்

    • A2: தனிப்பட்ட

    • A3: சூழல்

    • A4: பள்ளி தொடர்பான

    • விடை: A3: சூழல்

  15. தேர்வுக்கு உட்படுபவர் ________ மூலம் முயற்சி செய்து படப்புதிருக்கு தீர்வு காண்பர்.

    • A1: படங்களை நிறைவு செய்தல்

    • A2: பொருள்களை திரட்டுதல்

    • A3: படங்களை வரிசைப்படுத்துதல்

    • A4: எண் குறியீடு

    • விடை: A2: பொருள்களை திரட்டுதல்

  16. மனித உடலானது ________ வகை திரவங்களைக் கொண்டது என ஹிப்போகிரேட்ஸ் வரையறுக்கிறார்.

    • A1: 4

    • A2: 5

    • A3: 9

    • A4: 11

    • விடை: A1: 4

  17. பியாஜே எளிதான நிகழ்ச்சிகளை ________ எனவும் கடினமானவற்றைச் செயல்பாடுகள் என்றும் அழைக்கிறார்.

    • A1: பொருத்துதல்

    • A2: தன்வயப்படுத்துதல்

    • A3: ஸ்கீமா

    • A4: சமநிலைப்படுத்துதல்

    • விடை: A3: ஸ்கீமா

  18. கோபத்தை ஆக்ரோஷமான நடவடிக்கைகளில் வெளிப்படுத்தும்போது ________ சுரப்பியின் சுரப்பு அதிகரிக்கும்.

    • A1: அட்ரீனல்

    • A2: தைராய்டு

    • A3: கோனாட்ஸ்

    • A4: பான்கிரியாஸ்

    • விடை: A1: அட்ரீனல்

  19. ________ என்பது கற்றலின் உச்சநிலை ஆகும்.

    • A1: ஆக்குதல்

    • A2: காரணப்படுத்துதல்

    • A3: மதிப்பிடுதல்

    • A4: தர்க்கம்

    • விடை: A1: ஆக்குதல்

  20. தனிநபருடைய சூழலுக்கான உறவில் தனிநபருடைய செயல்களை அறிவியல்பூர்வமாக படிப்பதே உளவியல் ஆகும் எனக் கூறியவர்:

    • A1: என்.எல்.முன்

    • A2: க்ரோவ் மற்றும் க்ரோவ்

    • A3: உட்வெர்த் மற்றும் மார்க்யூஸ்

    • A4: பி.எஃப்.ஸ்கின்னர்

    • விடை: A3: உட்வெர்த் மற்றும் மார்க்யூஸ்

  21. முன்கூட்டித் திட்டமிடல் இல்லாமலேயே எந்த வகைக் குழுவினர் ஒன்று சேர்வார்கள்?

    • A1: முறையான குழு

    • A2: தடையில்லா குழு

    • A3: முறைசார் குழு

    • A4: முறைசாரா குழு

    • விடை: A2: தடையில்லா குழு

  22. வளர்ச்சிக்கு தூண்டுதலாக இருப்பது:

    • A1: மரபு மற்றும் முதிர்ச்சி

    • A2: முதிர்ச்சி

    • A3: முதிர்ச்சி மற்றும் கற்றல்

    • A4: கற்றல்

    • விடை: A3: முதிர்ச்சி மற்றும் கற்றல்

  23. 30 முதல் 50 வரையிலான மாணவர்களுடைய ஒரு வகுப்பை ஆசிரியர் சந்திக்கும் போது மிகப் பெரிய வேறுபாட்டு வீச்சில் இருப்பது?

    • A1: பாலினம்

    • A2: வயது

    • A3: உடல்

    • A4: தனியாள்

    • விடை: A4: தனியாள்

  24. கீழ்கண்டவற்றில் எது தூண்டல் தேர்வை தீர்மானிக்கிறது?

    • A1: விருப்பம் மற்றும் மனப்பான்மை

    • A2: மனப்பான்மை மற்றும் ஈர்ப்பு

    • A3: விருப்பம் மற்றும் ஈர்ப்பு

    • A4: முக்கியத்துவம் மற்றும் ஈர்ப்பு

    • விடை: A1: விருப்பம் மற்றும் மனப்பான்மை

  25. பயன்பாட்டு விதி மற்றும் பயன்படா விதியை ஒருங்கிணைக்க கிடைக்கும் விதி:

    • A1: பயிற்சி விதி

    • A2: ஆயத்த விதி

    • A3: மனப்பான்மை விதி

    • A4: விளைவு விதி

    • விடை: A1: பயிற்சி விதி

  26. ஆசிரியர்களுக்கு, ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்துவது இந்த தேர்வுக்கான உதாரணம்:

    • A1: அளவுகோல் சார்ந்த

    • A2: நெறிமுறை சார்ந்த

    • A3: தரம் சார்ந்த

    • A4: சமநிலை சார்ந்த

    • விடை: A1: அளவுகோல் சார்ந்த

  27. வகுப்பறைகளில் உள்ள மாணவர்களைக் காட்டிலும் மாணவிகள் அதிக பொறாமையுடன் இருக்கின்றனர், ஏனெனில்:

    • A1: பாலினப் பாகுபாடு

    • A2: முன்னுரிமை அணுகுமுறை

    • A3: சாதகமற்ற ஒப்பீடுகள்

    • A4: சார்புத் தன்மை

    • விடை: A2: முன்னுரிமை அணுகுமுறை

  28. ஒருவரின் சிக்கல் களைதல் நடத்தை எதை பொருத்தது?

    • A1: விழிப்புணர்வு

    • A2: மனப்பான்மை

    • A3: நாட்டம்

    • A4: மன நிலை

    • விடை: A4: மன நிலை

  29. வகுப்பறையில் நெறிபிறழ்வை தடுக்க, ஆசிரியர்கள்:

    • A1: அந்த மாணவரிடம் அன்பாக இருத்தல்

    • A2: எல்லா மாணவர்களிடமும் நேர்மறை மனப்பான்மையை வளர்த்தல்

    • A3: அசாதாரண குழந்தைக்கு பரிசளித்தல்

    • A4: ஒவ்வொருவரிடமும் கடினமாக நடந்து கொள்ளுதல்

    • விடை: A2: எல்லா மாணவர்களிடமும் நேர்மறை மனப்பான்மையை வளர்த்தல்

  30. 'சிடுமுகம்' ஆளுமை உடையவர்கள்:

    • A1: மனவெழுச்சியில் பலவீனம் ஆனால் உடலளவில் பலம் உடையவர்கள்

    • A2: உடலளவில் பலம் மற்றும் மனவெழுச்சியிலும் நிலையானவர்கள்

    • A3: மனவெழுச்சி மற்றும் உடல் ரீதியாகவும் பலவீனமானவர்கள்

    • A4: மனவெழுச்சியில் பலமும் உடலளவில் பலவீனம் உள்ளவர்கள்.

    • விடை: A1: மனவெழுச்சியில் பலவீனம் ஆனால் உடலளவில் பலம் உடையவர்கள்

தமிழ் (31 - 60)

  1. புறநானூறு உ.வே.சா வால் அச்சில் பதிப்பித்து வெளியிடப்பட்ட ஆண்டு:

    • A1: 1894

    • A2: 1794

    • A3: 1498

    • A4: 1948

    • விடை: A1: 1894

  2. பாடலின் தொடக்கம் முதல் முடிவு வரை நேராகவே பொருள் கொள்ளுமாறு அமைவது:

    • A1: நிரல் நிறைப் பொருள்கோள்

    • A2: கொண்டு கூட்டுப் பொருள் கோள்

    • A3: ஆற்று நீர் பொருள் கோள்

    • A4: தாப்பிசை பொருள் கோள்

    • விடை: A3: ஆற்று நீர் பொருள் கோள்

  3. "வள்ளி படித்தனள்"-இலக்கணக் குறிப்பு அறிக.

    • A1: வினையெச்சம்

    • A2: முற்றெச்சம்

    • A3: குறிப்புப் பெயரெச்சம்

    • A4: பெயரெச்சம்

    • விடை: A2: முற்றெச்சம்

  4. பாரதமணி, பாரததேவி ஆகிய இதழ்களில் ஆசிரியராகப் பணிபுரிந்தவர் யார்?

    • A1: வல்லிக்கண்ணன்

    • A2: கு.ப. ராஜகோபாலன்

    • A3: ஜெயகாந்தன்

    • A4: கல்கி

    • விடை: A2: கு.ப. ராஜகோபாலன்

  5. வண்மை யில்லையோர் வறுமை யின்மையாற் நிண்மை யில்லையோர் செறுந ரின்மையால் - என்று சிறப்பிக்கப்படும் நாடு.

    • A1: ஏமாங்கத நாடு

    • A2: தென்பாண்டி நாடு

    • A3: கோசலை நாடு

    • A4: சோழ வள நாடு

    • விடை: A3: கோசலை நாடு

  6. பொருத்தமற்ற இணையைத் தேர்ந்தெடுக்கவும்.

    • A1: கூடை- வேய்ந்தான்

    • A2: பசு - கதறும்

    • A3: பால்- பருகினான்

    • A4: சேவல் கூவும்

    • விடை: A1: கூடை- வேய்ந்தான்

  7. ஆத்திமாலை அணிந்த மன்னன் யார்?

    • A1: சேரன்

    • A2: சோழன்

    • A3: பாண்டியன்

    • A4: விஜயன்

    • விடை: A2: சோழன்

  8. ________ ல் மட்டுமே உயிர் எழுத்துகள் சொல்லின் இடையில் வரும்.

    • A1: உயிர்மெய்

    • A2: அளபெடை

    • A3: குற்றியலுகரம்

    • A4: ஆய்தக் குறுக்கம்

    • விடை: A2: அளபெடை

  9. நேற்று + இரவு என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்:

    • A1: நேற்று இரவு

    • A2: நேற்றிரவு

    • A3: நேற்றுரவு

    • A4: நேற் இரவு

    • விடை: A2: நேற்றிரவு

  10. இசை, குறிப்பு, பண்பு என்னும் பொருள்களுக்கு உரியதாய் வரும் சொல்:

    • A1: பெயர்ச்சொல்

    • A2: வினைச்சொல்

    • A3: இடைச்சொல்

    • A4: உரிச்சொல்

    • விடை: A4: உரிச்சொல்

  11. முனைவர் ச.இரா. அரங்கநாதன் விருது யாருக்கு வழங்கப்படுகிறது?

    • A1: சிறந்த காவலர்

    • A2: சிறந்த ஓவியர்

    • A3: சிறந்த நூலகர்

    • A4: சிறந்த ஆசிரியர்

    • விடை: A3: சிறந்த நூலகர்

  12. முற்றியலுகரச் சொல் எது?

    • A1: மாடு

    • A2: புகு

    • A3: பந்து

    • A4: எஃகு

    • விடை: A2: புகு

  13. மு.மேத்தா சாகித்திய அகாதெமி விருது பெற்ற நூல்:

    • A1: கண்ணீர்ப் பூக்கள்

    • A2: சோழநிலா

    • A3: ஆகாயத்துக்கு அடுத்த வீடு

    • A4: மகுடநிலா

    • விடை: A3: ஆகாயத்துக்கு அடுத்த வீடு

  14. 'ஆமந்திரிகை' என்பது:

    • A1: பட்டத்து யானை

    • A2: இடக்கை வாத்தியம்

    • A3: எடையளவு

    • A4: மூங்கில்

    • விடை: A2: இடக்கை வாத்தியம்

  15. "தாழ்கடல் இலங்கைச் செல்வம் நின்னதே" எனக் கூறியவர் :

    • A1: சுக்ரீவன்

    • A2: வீடணன்

    • A3: அனுமன்

    • A4: இராமன்

    • விடை: A4: இராமன்

  16. வறண்ட வாழ்வு துளிர்க்க மழைபோல் வந்தாய் நீ! என்பதில் இடம் பெற்றுள்ள உவமை :

    • A1: உரு உவமை

    • A2: பயன் உவமை

    • A3: மெய் உவமை

    • A4: வினை உவமை

    • விடை: A2: பயன் உவமை

  17. "மரபு நிலை திரிபின் பிறிது பிறிதாகும்" எனக் கூறும் நூல் எது ?

    • A1: நன்னூல்

    • A2: தொல்காப்பியம்

    • A3: முத்துவீரியம்

    • A4: வீரசோழியம்

    • விடை: A2: தொல்காப்பியம்

  18. குடியரசுத் தலைவர் நாளை தமிழகம் வருகிறார் - இத்தொடரில் இடம் பெற்றுள்ள வழுவமைதி :

    • A1: திணை வழுவமைதி

    • A2: பால் வழுவமைதி

    • A3: இட வழுவமைதி

    • A4: கால வழுவமைதி

    • விடை: A4: கால வழுவமைதி

  19. "ஜகன் மோகினி" என்ற இதழை நடத்தி வந்தவர் யார்?

    • A1: பாரதியார்

    • A2: வை. மு. கோதைநாயகி

    • A3: கண்ணதாசன்

    • A4: கி.ஜானகிராமன்

    • விடை: A2: வை. மு. கோதைநாயகி

  20. திராவிட மொழிக் குடும்பம் எத்தனை வகையாக பிரிக்கப்பட்டுள்ளது?

    • A1: 5

    • A2: 8

    • A3: 7

    • A4: 3

    • விடை: A4: 3

  21. சரியான தொடரைக் கண்டறிக.

    • A1: அவன் இலை பறித்தான்

    • A2: அவனுக்கு பிடிக்கும் என்பது எப்படி தெரியும்

    • A3: தினமும் பாடத்தை படி

    • A4: எழுதும்படி சொன்னேன்

    • விடை: A4: எழுதும்படி சொன்னேன்

  22. எத்திசையில் இருந்து வீசுகின்ற காற்றை கோடை என்பர்?

    • A1: குடக்கு

    • A2: குணக்கு

    • A3: வாடை

    • A4: தெற்கு

    • விடை: A1: குடக்கு

  23. பதினான்கு நரம்புகளைக் கொண்டது:

    • A1: பேரியாழ்

    • A2: சகோட யாழ்

    • A3: மகர யாழ்

    • A4: செங்கோட்டி யாழ்

    • விடை: A2: சகோட யாழ்

  24. பழங்கால எழுத்தாணி வகைகளுள் தவறானது:

    • A1: மடக்கெழுத்தாணி

    • A2: குண்டெழுத்தாணி

    • A3: வாரெழுத்தாணி

    • A4: சீரெழுத்தாணி

    • விடை: A4: சீரெழுத்தாணி

  25. "அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு" -இக்குறட்பாவில் பயின்று வரும் தொடையின் பெயர் என்ன?

    • A1: மோனை

    • A2: முரண்

    • A3: எதுகை

    • A4: இயைபு

    • விடை: A1: மோனை

  26. சோழ அரசன் இரண்டாம் குலோத்துங்கன் அவையில் முதலமைச்சராக இருந்தவர் யார்?

    • A1: அப்பர்

    • A2: சுந்தரர்

    • A3: சேக்கிழார்

    • A4: மாணிக்கவாசகர்

    • விடை: A3: சேக்கிழார்

  27. "கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதி" -என்னும் பாடலடி பயின்று வரும் நூல் எது ?

    • A1: சிலப்பதிகாரம்

    • A2: தொல்காப்பியம்

    • A3: மணிமேகலை

    • A4: புறப்பொருள் வெண்பா மாலை

    • விடை: A1: சிலப்பதிகாரம்

  28. ஏடன்று கல்வி; சிலர் எழுதும் பேசும் இயலன்று கல்வி; பலர்க் கெட்டா தென்னும் எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர்:

    • A1: பாரதியார்

    • A2: திரு.வி.க

    • A3: கவிமணி

    • A4: குலோத்துங்கன்

    • விடை: A4: குலோத்துங்கன்

  29. "யாதானும் நாடாமல் ஊராமால் என்னொருவன் சாந்துணையும் கல்லாத ________" -இக்குறளில் ஈற்றுச்சீர்களை நிரப்புக :

    • A1: வாரு

    • A2: மனம்

    • A3: வாறு

    • A4: வாரா

    • விடை: A3: வாறு

  30. திங்கள், ஞாயிறு, மழை என இயற்கையை வாழ்த்துவதாக தொடங்கும் நூல் எது?

    • A1: நீலகேசி

    • A2: சிலப்பதிகாரம்

    • A3: தேவாரம்

    • A4: திருத்தொண்டர் புராணம்

    • விடை: A2: சிலப்பதிகாரம்

அறிவியல் மற்றும் கணிதம் (கேள்விகள் 121 - 150)

கேள்வி 121: அணுக்கரு உலைகளில் தணிப்பான்கள் என்பவை கீழ்கண்ட எந்த ஒரு செயல்பாட்டிற்காக பயன்படுத்தப்படுகிறது?

  • A1: அதிகமான நியுட்ரான்களை உட்கவரும்

  • A2: நியுட்ரான்களின் இயக்க ஆற்றலை அதிகரிக்கிறது

  • A3: நியுட்ரான்களின் இயக்க ஆற்றலை குறைக்கிறது

  • A4: நியுட்ரான்களின் எண்ணிக்கையை அதிகரிக்கின்றது சரியான விடை: A3: நியுட்ரான்களின் இயக்க ஆற்றலை குறைக்கிறது

கேள்வி 122: 1/2 kg நிறையுள்ள நீரின் வெப்பநிலையை 1K உயர்த்த தேவையான வெப்ப ஆற்றலின் அளவு என்ன?

  • A1: 4200 J

  • A2: 1000 J

  • A3: 8400 J

  • A4: 2100 J சரியான விடை: A4: 2100 J

கேள்வி 123: மூன்று 3 ஓம் மின்தடைகள் முதலில் தொடரிணைப்பிலும் பின்னர் பக்க இணைப்பிலும் இணைக்கப்படுகின்றன. அவற்றின் தொகுபயன் தொடரிணைப்பு, பக்க இணைப்பு மின்தடைகளுக்கு இடையேயான விகிதம் (Rs:Rp):

  • A1: 3:1

  • A2: 6:1

  • A3: 9:1

  • A4: 1:9 சரியான விடை: A3: 9:1

கேள்வி 124: ஹைட்ரஜன் அணுவின் 5 வது சுற்றுபாதையின் ஆரம் 13.25 Å எனில் அச்சுற்றுபாதையில் உள்ள எலக்ட்ரானின் அலைநீளம்:

  • A1: 16.64 Å

  • A2: 166.4 Å

  • A3: 29.80 Å

  • A4: 298.5 Å சரியான விடை: A1: 16.64 Å

கேள்வி 125: விழி ஏற்பமைவுத் திறன் குறைபாட்டினை சரி செய்வது:

  • A1: குவி லென்ஸ்

  • A2: குழி லென்ஸ்

  • A3: இரு குவிய லென்ஸ்கள்

  • A4: குழி ஆடி சரியான விடை: A3: இரு குவிய லென்ஸ்கள்

கேள்வி 126: வெற்றிடத்தின் விடுதிறன் மதிப்பு:

  • A1: ε0 = 1 / (4π × 9 × 10^9 N m^2 C^-2)

  • A2: ε0 = 1 / (4π × 9 × 10^-9 N m^2 C^-2)

  • A3: ε0 = 1 / (4π × 9 × 10^9 N m^-2 C^2)

  • A4: ε0 = 1 / (4π × 9 × 10^-9 N m^-2 C^2) சரியான விடை: A3: ε0 = 1 / (4π × 9 × 10^9 N m^-2 C^2)

கேள்வி 127: பொருள் ஒன்று கட்டிடத்தின் உச்சியிலிருந்து கீழே விழுகிறது. அப்பொருள் 4 வினாடியில் தரையை அடைந்தால் கட்டிடத்தின் உயரம் என்ன? (காற்றுத் தடையை புறக்கணிக்க) (g = 9.8 ms^-2)

  • A1: 77.3 m

  • A2: 78.4 m

  • A3: 80.5 m

  • A4: 79.2 m சரியான விடை: A2: 78.4 m

கேள்வி 128: NH4OH + HNO3 -> NH4NO3 + H2O மேற்கண்ட வினை எவ்வகை வினையை சார்ந்தது?

  • A1: வீழ்படிவாக்கல்

  • A2: எரிதல் வினை

  • A3: நடுநிலையாக்கல் வினை

  • A4: சிதைவு வினை சரியான விடை: A3: நடுநிலையாக்கல் வினை

கேள்வி 129: ஒரு தனிமம் 2, 6 என்ற எலக்ட்ரான் அமைப்பு கொண்ட வாயு ஆகும். அத்தனிமத்தின் குழு / குடும்பம்:

  • A1: உப்பீனிகள்

  • A2: மந்த வாயுக்கள்

  • A3: சால்கோஜன்

  • A4: நைட்ரஜன் சரியான விடை: A3: சால்கோஜன் (ஆக்ஸிஜன் குடும்பம்)

கேள்வி 130: கீழ்க்கண்ட எந்த காரணி சோடியம் அசிட்டேட்டை மீத்தேனாக மாற்றுகிறது?

  • A1: அடர் H2SO4

  • A2: KMnO4/OH-

  • A3: NaOH/CaO

  • A4: நீர்த்த H2SO4 சரியான விடை: A3: NaOH/CaO (சோடா சுண்ணாம்பு)

கேள்வி 131: கட்டிடம் கட்டுவதில் அதிகம் பயன்படும் உலோகமானது ஈரக் காற்றுடன் வினைபுரிந்து பழுப்பு நிற நீரேறிய ஆக்சைடைத் தருகிறது. அந்த ஆக்சைடின் வேதிப் பெயர்:

  • A1: பெரஸ் ஆக்சைடு

  • A2: பெரஸ் டை ஆக்சைடு

  • A3: பெர்ரிக் ஆக்சைடு

  • A4: பெர்ரிக் டை ஆக்சைடு சரியான விடை: A3: பெர்ரிக் ஆக்சைடு (துரு)

கேள்வி 132: போரான் தொகுதி தனிமங்களின் பொதுவான வாய்ப்பாடு:

  • A1: ns^2 np^0

  • A2: ns^2 np^1

  • A3: ns^2 np^2

  • A4: ns^2 np^3 சரியான விடை: A2: ns^2 np^1

கேள்வி 133: அமிலம் அல்லது காரம் சேர்ப்பதினால் ஏற்படும் pH மாற்றத்தை தடுக்க உதவும் கரைசல்:

  • A1: அமிலக் கரைசல்

  • A2: தாங்கல் கரைசல்

  • A3: கார கரைசல்

  • A4: உப்புக் கரைசல் சரியான விடை: A2: தாங்கல் கரைசல் (Buffer Solution)

கேள்வி 134: BCC அலகுக் கூட்டில் உள்ள மொத்த அணுக்களின் எண்ணிக்கை:

  • A1: 1

  • A2: 2

  • A3: 3

  • A4: 4 சரியான விடை: A2: 2

கேள்வி 135: சிட்ரைட் பின்வருவனவற்றுள் எத்தகைய தாது வகையை சார்ந்தது?

  • A1: சல்பைடு தாது

  • A2: ஹேலைடு தாது

  • A3: ஆக்சைடு தாது

  • A4: கார்பனேட் தாது சரியான விடை: A4: கார்பனேட் தாது (FeCO3)

கேள்வி 136: காற்றின் மூலம் மகரந்த சேர்க்கை நடைபெறும் பண்பு காணப்படுவது:

  • A1: பாசிகள்

  • A2: பூஞ்சைகள்

  • A3: பிரையோ ஃபைட்டுகள்

  • A4: ஜிம்னோஸ்பெர்ம்கள் சரியான விடை: A4: ஜிம்னோஸ்பெர்ம்கள்

கேள்வி 137: நீர் வடிதல் எவ்வகை சிறப்பு செல்களால் நிகழ்ந்தேறுகிறது?

  • A1: இலைத்துளை

  • A2: ஹைடதோடுகள்

  • A3: ஹைலம்

  • A4: மைக்ரோபைல் சரியான விடை: A2: ஹைடதோடுகள்

கேள்வி 138: கருவுறுதலின் போது மகரந்தக்குழாய் இதன் வழியாக சூலினை சென்றடைகிறது:

  • A1: சூலடி

  • A2: சூலுறை

  • A3: சூல்துளை

  • A4: இரண்டாம் நிலை உட்கரு சரியான விடை: A3: சூல்துளை

கேள்வி 139: தவறான கூற்று / கூற்றுகளை கண்டறியவும்: (a) கிளைடோரியாவில் மகரந்தத்தாள்களின் மகரந்தகம்பிகள் இணைந்து மூன்று கற்றைகளாகக் காணப்படும். (b) மகரந்தத்தாள்களுடன் சூல்முடி இணைந்து உருவாவது கைனோஸ்டீஜியம் ஆகும். (c) மகரந்தத்தூள்கள் ஒன்றாக இணைந்து ஒரே தொகுப்பாக ஹைபிஸ்கஸில் காணப்படும். (d) அஸ்பராகஸில் மகரந்தத்தாள்கள் அல்லி இதழ்களுடன் ஒட்டிக் காணப்படும்.

  • A1: கூற்று (b), (c) மற்றும் (d)

  • A2: கூற்று (a), (c) மற்றும் (d)

  • A3: கூற்று (c) மட்டும்

  • A4: கூற்று (b) மட்டும் சரியான விடை: A2: கூற்று (a), (c) மற்றும் (d)

கேள்வி 140: ஒரு தாவர செல்லை ஹைபர்டானிக் கரைசலில் வைக்கும்போது நீர் எவ்வாறு கடத்தப்படுகிறது?

  • A1: செல்லிலிருந்து நீர் வெளியேறுகிறது

  • A2: வெளியே இருந்து செல்லுக்கு நீர் செல்கிறது

  • A3: செல்லின் வெளியே மற்றும் உள்ளே நீர் செல்கிறது

  • A4: நீர் மூலக்கூறுகள் நகர்வதில்லை சரியான விடை: A1: செல்லிலிருந்து நீர் வெளியேறுகிறது

கேள்வி 141: ஒரு இயல்பான செல்லை ஹைப்பர்டானிக் கரைசலில் வைக்கும்போது அச்செல்லில் நடைபெறும் விளைவு:

  • A1: பிளாஸ்மா சிதைவு

  • A2: பிளாஸ்மா சிதைவு மீட்சி

  • A3: உட்சவ்வூடு பரவல்

  • A4: சவ்வூடு பரவல் சரியான விடை: A1: பிளாஸ்மா சிதைவு (Plasmolysis)

கேள்வி 142: ஆந்த்ரோகுயினோன் இதில் காணப்படுகிறது:

  • A1: துளசி

  • A2: கற்றாழை

  • A3: நிலவேம்பு

  • A4: நன்னாரி சரியான விடை: A2: கற்றாழை

கேள்வி 143: சாதாரண சளிக்கு தடுப்பு மருந்து தயாரிப்பது கடினமானது ஏன்?

  • A1: இதன் RNA ஜீனோம் தொடர்ந்து திடீர் மாற்றமடைவதால்

  • A2: இதன் DNA ஜீனோம் தொடர்ந்து திடீர் மாற்றமடைவதால்

  • A3: உலகின் பல்வேறு பகுதிகளில் காணப்படும் தொடர் காலநிலை மாற்றத்தால்

  • A4: இதற்கு ஜீனோம் இல்லாததால் சரியான விடை: A1: இதன் RNA ஜீனோம் தொடர்ந்து திடீர் மாற்றமடைவதால்

கேள்வி 144: உயிரைப் போக்கும் இரத்தசோகை இவ்வைட்டமின் குறைபாட்டால் ஏற்படுகிறது:

  • A1: B1

  • A2: B6

  • A3: B3

  • A4: B12 சரியான விடை: A4: B12

கேள்வி 145: மனிதனின் பல் அமைப்பில் வெட்டும் பற்கள், கோரைப்பற்கள், முன்கடவாய் பற்கள் மற்றும் பின் கடவாய்ப் பற்களின் வரிசை அமைப்பு மற்றும் எண்ணிக்கை:

  • A1: 1,2,3,2 / 1,2,3,2 = 16 × 2 = 32

  • A2: 2,2,1,3 / 2,2,1,3 = 16 × 2 = 32

  • A3: 2,1,3,2 / 2,1,3,2 = 16 × 2 = 32

  • A4: 2,1,2,3 / 2,1,2,3 = 16 × 2 = 32 சரியான விடை: A4: 2,1,2,3 / 2,1,2,3 = 16 × 2 = 32

கேள்வி 146: காபி கொட்டை மற்றும் டீ இலை பதப்படுத்தும் போது அதிகமான நறுமணத்தை அளிப்பது:

  • A1: சாக்ரோமைசஸ் செர்விசியே

  • A2: ஆஸ்பர்ஸில்லஸ் நைசர்

  • A3: ஃபேசில்லஸ் மெகாடீரியம்

  • A4: லாக்டோ ஃபேசில்லஸ் சரியான விடை: A3: ஃபேசில்லஸ் மெகாடீரியம்

கேள்வி 147: விழித்திரையின் தசை நார்கள் செயல்புரிய உதவுவது:

  • A1: தண்டுவட நரம்பு

  • A2: கபால நரம்பு

  • A3: பரிவு நரம்பு

  • A4: எதிர் பரிவு நரம்பு சரியான விடை: A4: எதிர் பரிவு நரம்பு (Parasympathetic Nerve)

கேள்வி 148: இது உள்நாட்டுத் தேனீ வகை அல்ல:

  • A1: ஏபிஸ் டார்சேட்டா

  • A2: ஏபிஸ் புளோரியா

  • A3: ஏபிஸ் இண்டிகா

  • A4: ஏபிஸ் மெல்லிஃபெரா சரியான விடை: A4: ஏபிஸ் மெல்லிஃபெரா

கேள்வி 149: மனிதனில் நிகழும் முக்கிய இனப்பெருக்க நிகழ்வுகளின் சரியான வரிசையை எழுதுக:

  • A1: இனச்செல் உருவாக்கம் -> பிளவுப்பெருகல் -> கருவுறுதல் -> உறுப்பாக்கம் -> மகப்பேறு

  • A2: இனச்செல் உருவாக்கம் -> கருவுறுதல் -> பிளவுப்பெருகல் -> உறுப்பாக்கம் -> மகப்பேறு

  • A3: கருவுறுதல் -> பிளவுப்பெருகல் -> இனச்செல் உருவாக்கம் -> உறுப்பாக்கம் -> மகப்பேறு

  • A4: கருவுறுதல் -> பிளவுப்பெருகல் -> உறுப்பாக்கம் -> இனச்செல் உருவாக்கம் -> மகப்பேறு சரியான விடை: A2: இனச்செல் உருவாக்கம் -> கருவுறுதல் -> பிளவுப்பெருகல் -> உறுப்பாக்கம் -> மகப்பேறு

கேள்வி 150: வெளிச்சமில்லாத இரவு நேரங்களில் பினியல் சுரப்பி சுரக்கும் ஹார்மோன்:

  • A1: ஆக்ஸிடோசின்

  • A2: மெலட்டோனின்

  • A3: மெலனின்

  • A4: வாசோபிரஸ்ஸின் சரியான விடை: A2: மெலட்டோனின்

Popular posts from this blog

TNTET - SPECIAL TET 6th Tamil Term-1 Question and answer Study Materials MCQ Online Test

TNTET (SPECIAL TET ) 6th Tamil Term-1 (Page 2-7) line by line Online Test

TNTET (SPECIAL TET ) 6th Tamil Term-1 (Page 48-50) line by line Online Test